விழுப்புரம், ஜூலை 24-
விழுப்புரம் அருகே இறப்பு சான்று வழங்க லஞ்சம் வாங்கி அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே அரியலூர் திருக்கை ஊராட்சியை சேர்ந்த அன்னம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரூ. 1000 லஞ்சம் வாங்கிய அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை கைது செய்தனர்.