சென்னை,பிப்.7- பால் புதுமையினர் நடத்தும் சென்னை வானவில் திரைப்பட திருவிழா’ வெள்ளியன்று (பிப்.7) தொடங்கியது. பால் புதுமையினரின் (LGBTQIA+) வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளைச் சித்தரிக்கும் குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் முழு நீளப்படங்கள் ஆகியவற்றை திரையிடு வதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்கமாக கொண்டி ருக்கிறது இந்த திரைப்பட விழா. இது வரை நடந்த 3 பதிப்பு திரைப்பட விழாக்க ளில் சுமார் 300 படங்கள் திரையிடப் பட்டுள்ளன.தற்போது இதன் நான்காவது பதிப்பு திரைப்பட விழா வெள்ளியன்று தொடங்கி பிப்ரவரி 8 , 9ஆம் தேதிகளில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னையின் அலையன்ஸ் பிரன்சிஸில் நடைபெற உள்ளது. திரைப்பட விழாவிற்கான செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஷகிலா மற்றும் விழா ஏற்பாட்டாளர் ஷாஷா ஆகியோர் பேசினர்.செய்தியாளர்களிடம் ஷகிலா பேசுகையில், ”சென்னை வானவில் திரைப்பட திருவிழா ஏற்கெனவே 8 வருடங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் எல்லா நாடுகளிலிருந்தும் 2000 திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு வந்துள்ளன. அதிலிருந்து 55 படங்களை தேர்வு செய்து மூன்று நாட்களாக திரையிடல் நடத்துகிறோம் என்றார்.