districts

img

பணிநிரந்தரம் செய்யப்படும் வரை ஒப்பந்த ஊழியர் போராட்டம் ஓயாது வல்லூர் அனல் மின் நிலைய சிஐடியு சங்கம் அறிவிப்பு

திருவள்ளூர், செப்.10-  என்டிஇசிஎல் வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என அரசு முடிவெடுக்கும் வரை செப் 15 அன்று துவங்கும் உண்ணாநிலை  போராட்டம் ஓயாது என சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன் தெரி வித்துள்ளார். இந்த கோரிக்கைகயை வலியுறுத்தி மீஞ்சூர் பஜாரில் சனிக்கிழமை (செப்.9) கிளைத் தலைவர் எச்.சதீஷ் தலைமையில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மீஞ்சூரை அடுத்த வல்லூரில் ஒன்றிய பாஜக அரசு நிர்வகிக்கும் என்டிஇசிஎல் அனல் மின் நிலையத்தில் 10 ஆண்டுகளாக 2000க்  கும் மேற்பட்ட  தொழி லாளர்கள், ஒப்பந்த தொழி லாளர்களாகவே பணி யாற்றி வருகின்றனர். இது வரை ஒருவரையும் பணி நிரந்தரம் செய்ய வில்லை. பல்வேறு போராட்டங் களுக்கு பிறகு அரசு அசரவில்லை. கடந்த ஆண்டு 79 கோடி யூனிட் மின் சாரம் என்டிஇசிஎல் நிலையத்தில்  உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடும் வெப்பம்,  நிலக்கரி, சாம்பல்,  ஆகியவற்றின் தூசி யின் மத்தியில் உற்பத்தி செய்கின்றனர். சில நேரங்களில் விபத்து கள் ஏற்பட்டு பல தொழி லாளர்கள் பலியாகி உயிர் தியாகம் செய்து மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். ஆண்டுக்கு 90 லட்சம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இதிலிருந்து 40 லட்சம் டன் சாம்பல் வெளியேறு கிறது.  

இந்த சாம்பலை விற்றதின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ1200 கோடி  என்டிஇசிஎல் நிர்வாகத்திற்கு வருமானம் கிடைத்ததுள்ளது. 2021-22 ஆம் ஆண்டு மட்டும் மின் உற்பத்தி மூலம் ரூ4923 கோடி வருமானம் ஈட்டி யுள்ளது. இதில் ஒரு விழுக்காடு மட்டும்தான், அதாவது வெறும் ரூ.48 கோடி மட்டும் தான் தொழி லாளர்களுக்கு செலவிடு கிறது. ஒன்றிய அர சும், மாநில அரசும் சரிபங்கு களுடன் இணைந்து என்டி இசிஎல் நடத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக விவ சாய நிலங்களையும், முந்திரி தோப்புக்களையும், உப்பங்களையும் இழந்த இப்பகுதி மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எந்தப் பயனுமில்லை.  பல போராட்டங்கள் நடத்திய பிறகும் 10 ஆண்டு களுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் 2000 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. இனியும் பொறுக்க முடி யாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஆகவே அரசு,  பணி நிரந்த ரம் செய்யும் வரை  செப் 15 முதல் உண்ணா நிலை போராட்டம் தொடங்கப் படும் என்றார். இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் உதவி பொதுச் செயலாளர் கே.ரவிச் சந்திரன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரா ஜேந்திரன், மாவட்ட துணை நிர்வாகிகள் ஜி.விநாயக மூர்த்தி, பி.கதிர்வேலு, இ.ஜெயவேலு, ஜி.பாண்டி யன், எஸ்.நரேஷ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செய லாளர் பி.துளசிநாராயணன் ஆகியோர் பேசினர்.  நிறை வாக சூரிய நாராயணன் நன்றி கூறினார்.