வைக்கம் போராட்டம் நூற்றாண்டு துவக்க நாளான சனிக்கிழமையன்று (ஏப்ரல் 1) செங்கல்பட்டில் பெரியார் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக செங்கல்பட்டு பகுதி தலைவர் முத்திருளப்பன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் இ.சங்கர், க.புருசோத்தமன், அ.ராமலிங்கம், திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர். பூ.சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.