சென்னை, பிப்,19- நலவாரியத்தில் ஊரக பத்திரிகையாளர்களை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த ஆண்டு நிதி,நிலை அறிக்கை மற்றும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போதே நிறைவேற்ற வலியுறுத்தி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் டியுஜெ. தலைவர்கள் மனு அளித்தனர். இந்த நிகழ்வில் மாநிலத் தலைவர் பிஎஸ்டி.புருஷோத்தமன், மாநிலத் துணைத் தலைவர் பி.சண்முகவேல், அமைப்புச்செயலாளர் பி.ஆர். வேளாங்கன், சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.பி தேவேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.