கள்ளக்குறிச்சி, ஜூன் 7-
கள்ளக்குறிச்சியில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சம் செலவில் 500 நகர்புற நல வாழ்வு மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதன்படி, கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட விளாந்தங்கல் சாலையில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலி ருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து குத்துவிளக்கை ஏற்றி வைத்து நகர்ப்புற நல வாழ்வு மையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் பொது மக்களுக்கு வழங்க ப்படும் மருத்துவ சேவையை பார்வையிட்டனர். உதய சூரியன் எம்எல்ஏ உடனிருந்தார்.