கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியைச் சேர்ந்த உண்டகல் வளைவு, மேல் நிலவூர், கீழ் நிலவூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வனச் சட்டம் 1882 பிரிவு 17(ஏ)இன் படி காப்புக் காட்டில் இருந்து விலக்களிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்டஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.