districts

img

ஒன்றுபட்ட மக்கள் போராட்டம்: குடியிருப்புகளை அகற்ற முடியாமல் திரும்பி சென்ற அதிகாரிகள்

சென்னை, ஜூலை 7 - ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தால் சிட்லப்பாக்கம் குடியிருப்புகளை அகற்ற அகற்ற முடியாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். சிட்லப்பாக்கம் ஏரியை சுற்றி 60 ஆண்டுகளுக்கும் மேலாக  மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சர்வே எண் 256/1ல் பெரியார் தெரு, ஆனந்தா நகர் பகுதியில்  154 குடும்பங்களும், ராம கிருஷ்ணா புரத்தில் 213 வீடுக ளும் உள்ளன. இந்த பகுதிகளை  ஆக்கிரமிப்புகளாக வகைப் படுத்தி வருவாய்த்துறை நோட்டீஸ் கொடுத்திருந்தது. இந்தக் குடியிருப்புகளை அகற்ற காவல்துறையிடம் வருவாய்த்துறை பாதுகாப்பு கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தலைமையில் அப்பகுதி மக்கள்  தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். காவல்துறையினரின் வாக் குறுதியை ஏற்று போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ராம கிருஷ்ணா புரம் குடியிருப்பு களை அகற்ற வியாழனன்று (ஜூலை 7) காவல் துறை, வரு வாய்த் துறையினர் புல்டோச ருடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராம கிருஷ்ணா புரம் மக்களோடு, பெரியார் தெரு, ஆனந்தா நகர் மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுடை நம்பி, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தாம்பரம் பகுதிச்  செயலாளர் தா.கிருஷ்ணா, சிபிஐ மாநில துணைச் செயலா ளர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் ஏழுமலை மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

“தமிழகம் முழுவதும் நீர்நிலை பிரச்சனை உள்ளது.  இது தொடர்பாக நீதிமன்றத்தில்  மறுசீராய்வு மனு, மேல்முறை யீட்டு மனுக்களை தாக்கல் செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஜூன் 17 அன்று சந்தித்து வலியுறுத்தினோம். அதனை ஏற்றுக் கொண்ட அவர்  ஏழை, எளிய மக்களின் வாழ்விட உரிமைகளை பாதிக்கும் வகை யில் தமிழக அரசு எந்த நடவடிக் கைகளிலும் ஈடுபடாது என்று  உறுதி அளித்தார். அதற்கு  மாறாக நிர்வாகம் செயல்படு வதை ஏற்க முடியாது. குடியி ருப்புகளை அகற்ற அனு மதிக்க முடியாது” என்று பெ.சண் முகம் உறுதிபட தெரிவித்தார். இதனால், குடியிருப்பை அகற்றும் முடிவை அதிகாரி கள் கைவிட்டனர். ஏற்கெனவே, மாற்று இடம் பெற ஒப்புக் கொண்ட இரண்டு பேரின் வீடுகளை மட்டும் இடித்துவிட்டு அதிகாரிகள் சென்றனர்.