தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும். ஒன்றிய பாஜக அரசு திருத்திய மூன்று குற்றவியல் சட்டங்களும் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழகம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிற் சங்கங்களின் மாநில, மாவட்ட, வட்டார தலைவர்கள் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.