districts

img

தொற்றுநோய்களின் சகாப்தத்தில் இருந்து தொற்றாத நோய்களுக்கு மாறிவிட்டோம்

சென்னை, ஜூலை 28- இந்தியா தொற்றுநோய் சகாப்தத்தில் இருந்து தொற்றாத நோய்களுக்கு மாறிவிட்டதாக  ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். சென்னையில்  டாக்டர் மோகன் சர்வதேச நீரிழிவு மருத்துவமனையின் சார்பில் நீரிழவு நோய் குறித்த தேசிய மாநாட்டில் தனக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக்கொண்டு பேசிய அவர், அனைவரும் சீரான  ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கடைப்பிடிக்க  வேண்டும் என்று வலி யுறுத்தினார். இந்தியா தொற்றக் கூடிய நோய்களின் சகாப்தத்திலிருந்து தொற்றாத நோய்களுக்கு மாறிவிட்டதாகவும் அவர் கூறினார். “இளை ஞர் ஆற்றலை” பாது காக்க சீரான ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை அளவை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இது சுகாதார அமைப்பின் பொறுப்பு மட்டுமல்ல, தேசிய பொறுப்பும் ஆகும். . முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர்  - டாக்டர் மோகனின் நீரிழிவு நோயின் ஏழாவது பதிப்பு மற்றும் டாக்டர் மோகனின் அட்லஸ் ஆஃப் இந்தியன் ஃபுட்ஸ் இரண்டாவது பதிப்பு என இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். மூன்று நாள் மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 160க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை, நீரிழிவு மற்றும் ஊட்டச்சத்து, பாலுறவு செயலிழப்பு, நீரிழிவு மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோய், முதியோர் பரா மரிப்பு, உடல் பருமனால் ஏற்படும் நீரிழிவு போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடை பெற்றது. முன்னதாக டாக்டர்  வி.மோகன் நீரிழிவு சிகிச்சை, ஆராய்ச்சி, கல்வி மற்றும் தொண்டு நிறு வனங்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கிராமப்புற சுகாதார சேவை ஆகியவற்றை விளக்கினார். இந்த நிகழச்சியில் மோகன் நீரிழிவு மருத்துவமனையின் குழுமத்தின் நிர்வாக இயக்கு னர் ஆர்.எம். அஞ்சனா, துணைத்தலைவர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் ஆகி யோர் பேசினர்.