ஒன்றிய அரசின் அநியாய தண்டனை, ஆன்லைன் அபராதம், வாகன வரி உயர்வை கண்டித்தும், பாரதீய நியாய சங்கீதா சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக மத்திய சென்னை மாவட்டம், வள்ளுவர் கோட்டம் தோழர் என்.வரதராஜன் டாடா மேஜிக் நிறுத்தத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் தொடங்கி வைத்தார். மாவட்டப் பொருளாளர் எம்.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.