districts

img

பாணாவரம் அரசு பள்ளியில் சுகாதாரமற்ற கழிப்பறை

ராணிப்பேட்டை,ஜூன் 27- ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் புதிய மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருவதால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவிற்கு கழிப்பறை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் மாணவர்கள் கழிப்பறை செல்லவே சிரமப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.. மேலும் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் மாணவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாக இருப்பதாகவும், தொற்று நோய் பரவுவதற்கு முன்னர் கழிவறையை சுத்தம் செய்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.