சென்னை, மார்ச் 26 - பல்லாவரம் மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற வலி யுறுத்தி சனிக்கிழமையன்று (மார்ச் 26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை யில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இருவழிப்பாதை கொண்டதாக திட்டமிட்டு கட்ட இந்தப் பாலம் தற்போது ஒருவழிப்பாதை பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பாலத்தை இரண்டு வழிப் பாதையாக மாற்ற வேண்டும். ஜிஎஸ்டி சாலை - குன்றத்தூர் செல்லும் இந்திரா காந்தி சாலை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்பை அகற்ற வேண்டும், குரோம்பேட்டை ராதா நகர் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பல்லாவரம் வாரச்சந்தை வியாபாரி கள் சங்கம், பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன்ரோடு சிறு வியாபாரிகள் சங்கம், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த போராட்டத்திற்கு சிபிஎம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபா கரன் தலைமை தாங்கினார். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எஸ்.நரசிம்மன், எம்.தாமு மற்றும் ஜீவா (சிறுகடை வியாபாரிகள் சங்கம்), ஒய்.இஸ்மாயில் (வாரச் சந்தை வியாபாரிகள் சங்கம்), காந்தி (சிஐடியு) உள்ளிட்டோர் பேசினர்.