districts

img

அரசு மருத்துவமனையை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றுக!

சென்னை, பிப். 22 – குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை, பன்னோக்கு மருத்துவம னையாக தரம் உயர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 20 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளது. 1971ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் தினசரி 1500 புற நோயாளிகளும், சுமார் 200 உள் நோயாளி களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு விபத்து, மாரடைப்பு போன்ற அவசர சிகிச்சைகளுக்கு அளிக்க போதிய வசதி இல்லை. எனவே, இத்தகைய சிகிச் சைக்கு வருவோர் உயர்  சிகிச்சைக்காக செங்கல் பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். உயர்  சிகிச்சைக்கு செல்வோர் நீண்ட தூரம் ஆம்புலன்சில் செல்ல வேண்டி உள்ள தால், போக்குவரத்து நெரி சலில் சிக்கி பலர்  பாதி  வழியிலேயே சிகிச்சை  பலனின்றி உயிரிழக் கின்றனர். எனவே, இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி நீண்ட நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனை யாக தரம் உயர்த்த 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. மருத்துவமனைக்கு 6 மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கு, சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனை வளாகம் அருகே 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை  விரைந்து தொடங்குவ தோடு, அதை பன்னோக்கு மருத்துவமனையாக அமைக்க வலியுறுத்தி புத னன்று (பிப்.22) மருத்துவ மனை வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாம்பரம், பல்லாவரம் பகுதிக்குழுக்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசுகையில், “குரோம்பேட்டை மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனை யாக தரம் உயர்த்துவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் மக்களின் தேவையை உணர்ந்து பன்னோக்கு மருத்துவம னையாக அமைக்க வேண்டும். மாற்றுத்திறனா ளிகளுக்கு  சான்றிதழ் வழங் கும் பிரிவு செங்கல்பட்டில் உள்ளது. இதனால் அவர்கள் அலைகழிக்கப்படுவதை தடுக்க, அனைத்து நாட்க ளிலும் செயல்படும் வகை யில் குரோம்பேட்டை மருத்துவமனையில் அமைக்க வேண்டும்” என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு பல்லாவரம் பகுதிச் செயலா ளர் எம்.சி.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். இதனைத்  தொடர்ந்து மருத்துவ மனையின் தலைமை மருத்து வர் பழனிவேல் ராஜனை சந்தித்து மனு அளித்து பேசினர்.