districts

img

தனியாருக்கு இணையாக கல்வி கட்டணம் சிதம்பரத்தில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சிதம்பரம், ஏப். 1- சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவகல்லூரியை கடந்த ஆண்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி யாக பெயர் மாற்றமும் செய்து அர சாணை வெளியிட்டது. ஆனாலும், தனி யார் கல்லூரிகள் போன்று கல்விக் கட்ட ணம் செலுத்த கல்லூரி நிர்வாகம் வலி யுறுத்தியது. அப்போது, எதிர்ப்பு தெரி வித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூ லிக்கும் கல்வி கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, உயர் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்களை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.மாணவர்களின் போராட்டத்தை ஏற்ற அரசு, 2021 -2022 ஆண்டிலிருந்து கல்வி கட்ட ணத்தில் மாற்றம் செய்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக,  மற்ற தனியார் கல்லூரி  கட்டணம் ரூ. 4 லட்சம் நிர்ணயம் செய்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். இதனால், கோபமடைந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், செயலாளர், மருத்துவ மாண வர்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்று  கட்டணம் ரூ. 13,610 மற்றும் சலுகைகள் வழங்கபடும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அந்த கோப்பு நிதி துறையின் பரிசீலனை யில் உள்ளது.  தற்போது, கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றரிக்கையில், மார்ச் 30 ஆம் தேதிக்குள் பழைய கட்ட ணத்தையே செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளது. அந்த கட்டணத்தை செலுத்த தவறினால் வகுப்புகள் செல்ல அனுமதிக்கபட மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சுற்றறிக்கையால் பாதிக்கப்படும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மார்ச் 31 முதல் மருத்துவக் கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.