ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சனிக்கிழமையன்று (ஜூன் 4) சிந்தாதரிப்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாவட்டச் செயலாளர்கள் எல்.பி.சரவணதமிழன் (வடசென்னை), கே.மணிகண்டன் (மத்திய சென்னை), தீ.சந்துரு (தென்சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.