districts

img

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் வ.சுப்பையா சிலைக்கு மரியாதை

புதுச்சேரி, பிப்.7-  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர், மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் 114 ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி, புதுச்சேரி நெல்லி தோப்பு சிக்னல் அருகில் அமைந்துள்ள வ. சுப்பையாவின் சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சரவணன் குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று வ.சுப்பையாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். சிபிஎம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தோழர் சுப்பையா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சிபிஎம் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, இள வரசி, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சலீம், விஸ்வநாதன், சேது செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலை வர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.