சென்னை, நவ. 15 - விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் தலை முறை தலைவர் தோழர் என்.சங்கரய்யா வின் முதலாமாண்டு நினைவு தினம் வெள்ளி யன்று (நவ.15) அனுசரிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டத்தில் 140 மையங்களில் செங்கொடி யேற்றி, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், புகழஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது. தோழர் சங்கரய்யா இல்லம் அமைந் துள்ள குரோம்பேட்டையில், பேருந்து நிலை யம் அருகே நினைவேந்தல் கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கிளைச் செயலாளர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.சி.பிரபாகரன், ஜி.விஜயலட்சுமி எம்.சி., தோழர் சங்கரய்யா வின் மகன் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் பேசினர்.