districts

img

100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

விழுப்புரம், ஜூன் 8- நூறு நாள் வேலை கேட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈட்டுபட்டனர். நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். இதற்கிடையே ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் இளங்கோவன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

;