districts

சென்னை முக்கிய செய்திகள்

கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, டிச.28- தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை யொட்டி அவரை காண தொண்டர்கள் திரண்டு வருவதால் கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. இது குறித்து காவல் துறை சார்பில் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- விஜயகாந்தை காண தொண்டர்கள் திரண்டு வருவதால் கோயம்பேடு மேம்பாலத்தில் வாக னங்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் பாடி மேம்பாலம், திரு வீதி அம்மன் சர்வீஸ் சாலை,சாந்தி காலனி 13 -வது மெயின் வீதி வழி யாக மாற்று பாதையில் செல்ல வேண்டும் என அறி வுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல்  தீவு திடலுக்கு மாற்றம்

சென்னை,டிச.28-  தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் டிச.28 அன்று காலை 6.10 மணிக்கு காலமானார். இந்த செய்தி கட்சிக்கும், திரையுலகிற்கு பேரிழப்பாகும். விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலை துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வெள்ளிக்கிழமை (டிச.29) காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.  இறுதி ஊர்வலம் தீவுத்திடல் இருந்து மதியம் 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கு 4.45 மணிக்கு தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்று தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.