கள்ளக்குறிச்சி, டிச.20- கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு, உழவர் சந்தை, துருகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து எழுந்த புகாரை தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா ஆகி யோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உடனிருந்தார். இந்த ஆய்வின்போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் இளையராஜாவிடம் போக்குவரத்து இடையூறுகள் குறித்து கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து, உழவர் சந்தைக்கு சென்றார். அங்கு போக்குவரத்து நெரிசல், இரு சக்கர வாகனம் நிறுத்துதல் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உழவர் சந்தை பின்புறம் வணிக வளாக கட்டிடத்தில் வழியாக வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு இடத்தை தேர்வு செய்தார். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் வெளிப்புறம் மற்றும் துருகம், கச்சேரி, காந்தி சாலைகள், சேலம் சாலைகளில் உள்ள உணவகங்கள், நகை, துணிக் கடை கள், பேக்கரி உள்ளிட்ட கடைகள் முன்பு வாகனம் நிறுத்துவதற்கு காவல்துறை ஒதுக்கும் இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். மீறி நிறுத்தினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தனர்.