சென்னை, ஆக.4–
இந்தியாவின் முன்னணி பம்ப் மற்றும் வால்வ் உற்பத்தி நிறுவனமான கேஎஸ்பி லிமிடெட்டின் ஜனவரி முதல் ஜூன் 2023 வரையிலான முதல் அரையாண்டு காலத்திற்கான விற்பனை வளர்ச்சியானது 24.8 சதவீதம் அதிகரித்து 10,809 மில்லியன் ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகை யில் இதன் விற்பனையானது 24.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள் ளது.
இதேபோல் கடந்த நிதி ஆண்டு 2022–ன் 2வது காலாண்டு டன் ஒப்பிடுகையில் நடப்பு 2வது காலாண்டில் இதன் ஆர்டர் 26 சதவீதம் அதிகரித்து 6165 மில்லியன் ரூபாயாக உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் ஏற்றுமதியும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இதன் அனைத்து தொழிற்சாலை களிலும் கிடங்கு நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது என நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.