என்எஸ்சி போஸ் சாலையோர கடைகளை ஜூன் 13 அன்று அகற்றும் போது அதிர்ச்சியில் உயிரிழந்த கிருஷ்ணவேணி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் என்ற அவரது மரணத்திற்கு காரணமான செயற்பொறியாளர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் என்எஸ்சி போஸ் சாலையில் சனிக்கிழமை (ஜூன் 15) ஊர்வலம் மற்றும் வியாபாரிகள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. காவல்துறையின் தடையை மீறி கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, மாவட்டக்குழு உறுப்பினர் இரா.அருள்குமார், வியாபாரிகள் சங்க தலைவர்கள் எம்.வி.கிருஷ்ணன், அபுதாகீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.