ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் ராணிப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி தலைமையில் டிராக்டர் பேரணி வியாழனன்று (ஜன. 26) நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் இரா.சரவணன், நிர்வாகிகள் என்.ரமேஷ், சி.ராதாகிருஷ்ணன், பி.ரகுபதி, டி.சந்திரன், அ.தவராஜ், ஆர்.மணிகண்டன், ராஜானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.