சிதம்பரம், மே 18-
சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சாந்தி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:-
2023-24 ஆம் கல்வி யாண்டிற்கான இளநிலை முதலாம் ஆண்டு, இளங்கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான இணைய வழியில் கடந்த 9 ஆம் தேதி முதல் வரும் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 164 அரசுக் கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் சேர விரும்புகிற மாணவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளில் அனைத்து பாடங்களுக்கும் ஒருங்கிணைந்த www.tngasa.in என்ற இணைய முகப்பு வாயிலாக ஒரே விண்ணப்பம்மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப பதிவு, விண்ணப்பக் கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தல் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்தல் ஆகிய வற்றை உள்ளடங்கிய அனைத்து செய்முறைகளையும் இணைய தளத்தில் மேற்கொள்ள லாம். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தி லுள்ள சி முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 14 இள நிலை பாடப் பிரிவுகளும், 10 முதல் நிலை பாடப்பிரிவுகளும், 8 ஆராய்ச்சி பாடப்பிரிவுகளும், நடப்பு கல்வி யாண்டில் பி.ஏ (தமிழ் மற்றும் ஆங்கிலம்), பி.ஏ பொருளாதாரம் (தமிழ் வழி ஆங்கில வழி) பிகாம் (ஆங்கில வழி) பி.பி.ஏ (ஆங்கில வழி) பி.எஸ்.சி கணி தம் (தமிழ் வழி ஆங்கில வழி) புள்ளியல் (ஆங்கில வழி) இயற்பியல் (ஆங்கில வழி) வேதியியல் (ஆங்கில வழி) தொழில் முறை வேதியல் (ஆங்கில வழி) தாவரவியல் (தமிழ் வழி ஆங்கில வழி) விலங்கியல் (தமிழ் வழி ஆங்கில வழி) கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆங்கில வழி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் வரும் 19ஆம் தேதி என்பதால் சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க மாணவர்கள் 63 69 29 71 03, 99 76 23 17 97 என்ற கல்லூரி உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.