திருவள்ளூர்,ஜூன் 29-
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மதுரைவாசல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்நிலையில், இக்கோவிலுக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தில் ஒன்பது பேர் சுமார் 30 ஆண்டுகளாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ள வீடுகளை அகற்று மாறு இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் 2017-ம் ஆண்டு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார். அதன் பின்னர் இப்பகுதியில் வசித்து வந்த இருவர் நீதிமன்றத்தை நாடியதாக கூறப்படுகிறது. ஆறு ஆண்டு களாக நிலுவையில் உள்ள உத்தரவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி க்கு இணை ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், பெரியபாளையம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஏழு