திருவள்ளூர்,ஜூலை 31-
ஆர்.கே.பேட்டை அடுத்த கல்யாணபுரம் கிராமத்தில் பகுதிநேர ரேசன் கடை திறக்கக்கோரி திங்களன்று (ஜூலை 31), வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்.கே.பேட்டை, கல்யாணபுரத்திலிருந்து 3 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள சகஸ்ர பத்மாபுரம் கிராமத்திற்கு சென்று சுமார் 50 ஆண்டுகளாக ரேசன் பொருட்களை வாங்கி வரு கின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வரு கின்றன.
இந்த சூழலில் தங்கள் கிராமத்திலேயே பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்.கே.பேட்டை வட்டாட்சி யரிடம் மனு கொடுத்து 1 வருடமாகிறது. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் கடந்த மூன்று மாதங்களாக ரேசன் கடையில் எந்த ஒரு பொருட்களையும் வாங்கா மல் புறக்கணித்து வந்துள்ள னர். இருப்பினும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த நிலையில் உடனடியாக பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பின்னர் அதிகாரி கள் பேசுகையில், அடுத்த மாதத்தில் பகுதி நேர ரேசன்கடை அமைக்க ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதி யளித்தனர்.இதனை நம்பி பொது மக்கள் கலைந்து சென்றனர்.
இதற்கு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பல ராமன் தலைமை தாங்கி னார்.ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா கிருஷ்ணன், துணைத் தலை வர் சுபாஷினி மோகனன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஜி.சம்பத், மாவட்ட பொருளாளர் சி.பெருமாள், ஒன்றிய செயலாளர் குப்பன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.ஜி.கணேசன், வாலிபர் சங்கத்தின் நிர்வாகி சிவ பிரசாத் உள்ளிட்ட பலர் பேசினர்.