districts

img

வன்முறையற்ற சமூகம் அமைய பெண்கள் போராட முன்வர வேண்டும் மகளிர் மாநாட்டில் மாதர் சங்க தலைவர் வேண்டுகோள்

சென்னை, ஜூன் 10-

     கோரிக்கைகளுக்காக போராடும் அதே நேரத்தில் வன்முறையற்ற சமூகம் அமையவும் பெண்கள் போராட முன்வர வேண்டும் என்று மகளிர் மாநாட்டில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலாண்டினா வேண்டு கோள் விடுத்தார்.

    எல்.ஐ.சி. உழைக்கும் மகளிர் 27ஆவது மாநாடு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னைக் கோட்ட 2இன் மகளிர்  துணைக்குழு சார்பில் சென்னை  பாரிமுனை யில் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெற்றது.

    டி.லீலாவதி, எஸ்.எஸ்.கீதா ஆகியோர் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா மாநாட்டை துவக்கி  வைத்து பேசுகையில், கடந்த ஜனவரி மாதம் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்  பூஷன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத தால், தில்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பாஜக அரசு குற்றம்சாட்டப்பட்டவரை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போரட எல்ஐசி ஊழியர்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    எந்த ஒரு போராட்டமானாலும் பெண்கள்  இணைந்து போராடினால்தான் அந்த போராட்டம் வெற்றிபெறும். எனவே பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்கும் போராட்டத்தில் பெண்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். மேலும்  நமது கோரிக்கைகளுக்காக போராடு வதோடு பொது பிரச்சனைகளுக்காக வும், வன்முறையற்ற சமூகம் அமைய வும் போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

   மகளிர் துணைக்குழு அமைப்பாளர் கே.துளசி அறிக்கையை சமர்ப்பித்தார். கோட்டம் 1இன் மகளிர் துணைக்குழு அமைப்பாளர் எஸ்.மஞ்சுளா, முகவர்கள் சங்கத்தின் மகளிர் துணைக் குழு ஒருங் கிணைப்பாளர் கே.வளர்மதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொதுச்செயலாளர் ஆர்.சர்வமங்களா தொகுப்புரை வழங்கி, தீர்மானங்களை முன்மொழிந்தார். தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் க.சாவாமிநாதன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

தீர்மானங்கள்

    எல்.ஐ.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும், பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

    அமைப்பாளராக கே.சுமதி, இணை அமைப்பாளர்களாக எஸ்.எஸ்.கீதா, டி.லீலா வதி, லதா மகேஷ்வரி, சிந்துஜா, அரிப்பிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.