சென்னை, ஜூலை 8 - சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலை திடீர் நகர் பகுதியில் அடிப்படை வசதி செய்துதர வேண்டும், அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 8) மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எழும்பூர் தொகுதி, 99வது வட்டம் பிரிக்ளின் சாலையில் ஓட்டேரி சுடுகாடு ஒட்டி சுமார் 35 கிரவுண்ட் நிலத்தை 1949ஆம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின் கீழ் அரசாங்கம் கையகப்படுத்தியது. இவ்விடத்தில் (திடீர் நகர்) தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1977 ஆம் ஆண்டு குடிசைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 98 குடும்பங்களுக்கு மனை கள் ஒதுக்கியது. தற்போது அப்பகுதி யில் 700க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி கொடுக்க கோரி வாரிய மேலாண்மை இயக்குநரிடம் இருமுறை மனு கொடுக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தியதோடு, மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக குடியிருப்பு கட்ட ஏதுவாக மாநகராட்சி தீர்மானம் நிறை வேற்றியது. அதனடிப்படையில் வாரிய மேலாண்மை இயக்கு நரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தித்து பேசிய போது, அரசு நிதி ஒதுக்கும் போது பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். அதன்படி, புதிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்கு எவ்வித தொடக்க நிலை ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை. அடிப்படை வசதிகளற்ற திடீர் நகர் மக்கள், பொதுக் கழிப்பிடத்தையும் ஓட்டேரி சுடுகாட்டையொட்டிய திறந்து வெளியையும் காலை கடனுக்காக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. ஒட்டுமொத்த மக்களின் குடிநீர் தேவைக்காக பொது குழாயை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி மாநகராட்சிக்கு எழுத்துப் பூர்வமாக மனு கொடுத்தும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை.
ஒடுக்கப்பட்ட, ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இப்பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் கூட உரிய நேரத்தில் செய்து தராமல் இருப்பது எந்த வகையில் ஏற்கத்தக்கது அல்ல. எனவே, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்க வேண்டும், பொதுகழிப்பிடங்கள் தூய்மையாகவும், சுகாதார மாகவும், தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுக்கு மாடி குடியிருப்பை விரைந்து கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதி செயலாளர் கே.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் இ.சர்வேசன், வே.ஆறுமுகம், பகுதி குழு உறுப்பினர்கள் ஜி.ராஜா மணி, ஜி.புகழேந்தி, பி.கே.மூர்த்தி, ஏ.நாகராணி, ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையர் ஆர்.லலிதாவை சந்தித்து ஜி.செல்வா தலைமையில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட துணை ஆணையர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அதிகாரி மற்றும் 8வது மண்டல மாநகராட்சி அதிகாரியை தொடர்பு கொண்டு திடீர் நகர் மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வாழ்விட மேம்பாட்டு வாரியத் தோடு கலந்துபேசி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்தார்.