சென்னை, ஜூலை 31-
டிஎம்டி பார் கம்பிகளை உற்பத்தி செய்யும் ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “உண்மையை அறிவோம்” பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக சுமார் 15 கோடி ரூபாய் முதலீட்டில், டிஎம்டி பார்களை சோதிக்க பிரத்யேக ஜெர்மன் தொழில்நுட்பங்களுடன் நிறுவப்பட்டுள்ள 12 நடமாடும் தொழில்நுட்ப வாகனங்கள் மூலம் அடுத்த ஓர் ஆண்டுக்கு தமிழ் நாடு முழுவதும் செல்ல உள்ளது.இதில் பொதுமக்கள் டிஎம்டி பார் கம்பிகளை பரிசோதித்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.