districts

img

திருவொற்றியூர்-மணலி சாலை மேம்பால பணிகள் 5 மாதங்களில் முடிவடையும்

திருவொற்றியூர், நவ.12- திருவொற்றியூரில் இருந்து மணலிக்கு செல்லும் சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க நெடுஞ் சாலைத்துறை சார்பில் ரூ. 52 கோடி செல வில் பக்கிங்காம் கால்வாய் மேம் பாலம் கட்டுமான பணி  கடந்த 2016 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  பல்வேறு காரணங்க ளால் பாலப்பணிகள் மந்த மாக நடைபெற்று வருகிறது. இதனால் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்கள் சுமார் 7 கிமீ  தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த நிலை யில் கால்வாய் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெறும் அருகாமையில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் பழுதடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாகி அதில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி விழுந்து எழுந்து செல்கின்றனர்.  இதனால்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து மாநக ராட்சி  உதவி ஆணையர் சங்க ரன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், உதவி  பொறியாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த  பகுதியை ஆய்வு செய்தனர்.  பின்னர் ராட்சத மோட்டார் கள் மூலம் சாலையில் தேங்கி  இருந்த மழை நீரை அப்புறப் படுத்த நடவடிக்கை மேற் கொண்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் தற்காலிக கால்வாய்களை வெட்டி மழை நீர் அப்புறப் படுத்தப்பட்டது. தொடர்ந்து  பள்ளத்தில் மணலை கொட்டி சாலையை சமப்படுத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது,  மழைக்காலம் தொடங்கி இருப்பதால் மேம்பாலப் பணியை தொடர முடிய வில்லை. இன்னும் 20 நாட்க ளில் மேம்பால இறுதி கட்ட கட்டுமான பணி  தொடங்கப்பட்டு அடுத்த 5 மாதங்களில் பணி நிறைவு பெறும் என்றனர்.