districts

சென்னை முக்கிய செய்திகள்

பாலர் பூங்காவின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு

திருவள்ளூர், நவ. 17- பாலர் பூங்காவின் திரு வள்ளூர் மாவட்ட மாநாடு சனிக்கிழமையன்று (நவ.16), தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் நடை பெற்றது. பாலர் பூங்கா வின் திருவள்ளூர்  மாவட்ட முதல் மாநாடு, மாவட்ட கன்வீனர் ஏ. பத்மா தலைமையில் நடை பெற்றது. பாலர் பூங்கா நிர்வாகி ஜனனி வர வேற்றார். மாநாட்டில் எளிய அறிவியல் சோதனை களை அனிதா குமாரி செய்து காட்டினார். கே.எப்சிபா சிறு,  சிறு விளை யாட்டுக்களை சொல்லி கொடுத்தார். க.ஏ.தமிழ்முரசு மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். பாலர் பூங்கா வின் நிர்வாகி சி.பெரு மாள் வாழ்த்தி பேசினார். மாநில நிர்வாகி கோட்டீஸ்வரி விழாவை நிறைவு செய்து பேசினார். எஸ்.கீர்த்தி வாசன் நன்றி கூறினார்.முன்னதாக மாணவர்கள் பாடல்கள்,  நடனங்கள்,  சொற்பொழிவு, கதைகள் என பன்முக கலை நிகழ்ச்சி கள் நடத்தினர். மாவட்ட குழு தேர்வு பாலர் பூங்காவின் மாவட்ட தலைவராக பாஸ்கரன் (ஆர்.கே. பேட்டை), செயலாளராக ஜனனி (ஊத்துக்கோட்டை), பொருளாளராக அமுதன் (மீஞ்சூர்), ஒருங்கி ணைப்பாளர்களாக ஜெய் கணேஷ், விஜி, தாமு, சின்னா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு மருத்துவ முகாம் 23ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை, நவ.17- மாற்றுத்திறனாளி சான்று வழங்கு வதற்கான சிறப்பு மருத்துவ முகாமை, வரும் 23ம் தேதி வரை நீட்டித்து சென்னை ஆட்சியர் அறி விப்பு வெளியிட்டுள்ளார். வடசென்னை மாவட்ட மாற்றுத்  திறனாளிகள் நல அலுவலகத்திற்  கான ஒதுக்கப் பட்டுள்ள மண்ட லம் 1 முதல் மண்டலம் 8 வரை யுள்ள பகுதிகளில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சிறப்பு முகாம் நடை பெற்று வந்தது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் மழையின் காரணமாக வருகிற 23ம் தேதி வரை நீடிக்கப்  பட்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்டஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். 

2 ஆண்டுகளாக ஆர்டிஇ பள்ளிக் கட்டணம் வழங்கவில்லை

திருச்சி, நவ.17- தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ கல்விக் கட்டணம் 2 ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை; அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைபப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சிராப் பள்ளியில் நடைபெற்றது.   இலவச கட்டாயக் கல்விக் கட்டணம் 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு வழங்கப்படாததால் பள்ளிகள் மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால் தனியார்  பள்ளிகள் சுமூகமாக செயல்பட இயலாத நிலை உள்ளது. சுமார் 8 ஆயிரம் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு  வரை படித்து வரும் சுமார் 4.5 லட்சம் மாணவர்களின் 2023 -24 மற்றும் 2024-25 ஆம் கல்வி  ஆண்டுகளுக்கான சுமார் 1,000 கோடி கல்விக் கட்டணத்தை விரைவில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இந்த தொகை வழங்க தாமதமாவதால் சுமார் 2 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சரிவர சம்பளம் வழங்க இயலாத நிலை மற்றும் பள்ளிகளுக் கான அத்தியாவசிய செல வினங்களை கூட செய்ய இயலாத நிலை உள்ளது. பள்ளிகளில் பாடத்தில் மட்டும் அல்லாது விளை யாட்டுகளிலும் மாணவர்களையும் தமிழ்நாடு அரசு ஈடு படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.