சென்னை,ஜூன் 18-
ரயில் பயணிகள் தங்க ளது ஸ்மார்ட் போனில் யுடிஎஸ் செயலியை பதி விறக்கம் செய்து, முன்பதி வில்லாத டிக்கெட்டை எடுத்துக் கொள்ளும் வசதி கிராமப்புறங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
கிராமப்புற பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வேயில் ஹால்ட் நிலையங்களில் யு.டி.எஸ். செல்போன் செயலியை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹால்ட் நிலையம் என்பது கிராமப்புறத்தில் உள்ள ரயில் நிலையம் ஆகும். இதற்கு முன்பாக கிராமப்புற ரயில் நிலையங்களில், டிக்கெட்டை பயணிகளுக்கு முகவர்கள் நேரடியாக வழங்குவார்கள். தற்போது, யு.டி.எஸ். செல்போன் செயலி மூலமாக பயணிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.