திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழனன்று (ஆக. 31) கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் 912 பயனாளிகளுக்கு ரூ35.83 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி காவல்துறை ஆணையாளர் கே.சங்கர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), சுதர்சனம் (மாதவரம்), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), க.கணபதி (மதுரவாயல்), துரை சந்திரசேகரன் (பொன்னேரி) உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.