சென்னை,ஆக.4-
சென்னை ராமாபுரம் பூத்தபேடு பகுதியில் வசித்து வருபவர் வினோத் (வயது 38) இவர் ஏற்கெனவே திருமண மாகி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த பெண்ணுக்கு 15 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி திடீரென மாயமானார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்த தையடுத்து அந்த வாலிபரின் செல்போனை வைத்து போலீசார் கண்காணித்தனர். அப்போது மாயமான மாணவி ராமாபுரத்தில் இருந்து பெருங்களத்தூருக்கு சென்று அங்கிருந்து வாலிபருடன் அவரது சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்று மீட்டனர். பின்னர் இருவரையும் ராமாபுரம் காவல் நிலையத் துக்கு அழைத்து வந்து மாணவியிடம் பெண் காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்தது. மாணவியின் தாயுடன் குடும்பம் நடத்தி வந்த வினோத் மாண வியை மிரட்டி கடந்த 8 ஆண்டுகளாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கும் தகவல் தெரியவந்தது. மாணவி கண்ணீர் மல்க தனக்கு நேர்ந்த கொடுமைகளை கதறியபடி கூறினார். இதன் காரணமாகவே வீட்டில் இருக்க பிடிக்காமல் கடிதம் எழுதி வைத்திவிட்டு வாலிபருடன் சென்றதாகவும் மாணவி தெரிவித்தார். தாயுடன் குடும்பம் நடத்தி கொண்டே மகளாக பார்க்க வேண்டிய சிறுமியிடம் வளர்ப்பு தந்தை யான வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வினோத்தை தாய் 2- வதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திய போது தான் பாதிக்கப்பட்ட சிறுமி பிறந்துள்ளார். இப்படி குழந்தையில் இருந்தே வளர்த்த பிள்ளையைத்தான் சிறு மியான பின்னர் வினோத் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து மோசம் செய்திருப்பதும் தெரிய வந்தது. இது தொடர் பாக மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை யும் போலீசார் கைப்பற்றினர். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் வினோத்தால் தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி மாணவி விரிவாக எழுதி உள்ளார். இந்த கடிதத்தை முக்கிய ஆதாரமாக கைப்பற்றிய போலீசார் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை அழைத்துக் கொண்டு சென்ற வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தனர்.