சென்னை மாநகரத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்குவது குறைந்துள்ளது. ஆனால், சாதாரண மழைக்கே அண்ணாசாலை, நந்தனம் பெர்ன் பேட்டை அருகே மழைவெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள். பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.