districts

திருவள்ளுவர் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா

வேலூர், மே 29-

     வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

     இதுகுறித்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-  

     திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற ஜூன் 19 தேதி நடைபெறுகிறது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர் வி.கே. சிங் ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளனர்.  

    இந்த விழாவில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் பெற உள்ளனர். விழாவில் முனைவர் பட்டம் மற்றும் பட்டப் படிப்புகளில் சாதனை படைத்த 550 பேர் நேரடியாக பதக்கம் பெறவுள்ளனர்.

    மற்ற மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளில் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டு பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

   திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு 14 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., உள்ளிட்ட 5 வருட முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஒரு வருட பட்டய படிப்புகள் இதில் தொடங்கப்பட்டுள்ளன.

   12 ஆம் படித்த மாணவர்கள் நேரடியாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இந்த பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயனடையலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.