ரயில்வேயில் செயல்படும் தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் 2024 டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் (டிஆர்இயு) நட்சத்திர சின்னத்திற்கு வாக்கு கேட்டு சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பொது மேலாளர் அலுவலகம் முன்பு கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்.எல்.எல்.எப். சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு தொழிலாளர்களிடையே வாக்கு சேகரித்தார். இதில் சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.அரிலால், செயல் தலைவர் அ.ஜானகிராமன், ஆர்.எல்.எல்.எப். பொதுச்செயலாளர் வி.விஜயன், தலைவர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோரும் பேசினர்.