சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் வரை அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடை மேம்பாலம் அடுத்தவாரம் திறக்கப்படஉள்ளது. இதனால் ரயில் நிலையத்தில் வந்து இறங்குவோர் பரபரப்பான ரங்கநாதன் தெரு வழியாக சென்று சிரமப்படுவதற்கு பதில் இந்த பாதையை பயன்படுத்தி பேருந்து நிலையத்தை அடையலாம்.