சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருத பெயர் மாற்றம் செய்ய இருக்கும் மசோதாவை கண்டித்து சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் எஸ்.செந்தில் தலைமையில் வழக்குரைஞர்கள் மணிவண்ணன், ஆழ்வார், நடனம், செல்வகுமார், சங்கர், சிலம்புச் செல்வன், தயாநிதி, பாலகுரு, ஜானகி, ஸ்ரீதேவி, பிரபு, காமராஜ், உமாசங்கர், அதியமான் சங்க செயலாளர் சபாநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.