districts

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது

சென்னை, ஏப். 10 - சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் போதிய அளவுநீர் இருப்பதால் கோடைக்காலத்தில்  தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். பூண்டி நீர்த்தேக்கத்தில் 30.81 அடி உயரத்திற்கும் (1933 மில்லியன் கன அடி), புழல் ஏரியில் 19.49 அடி உயரத்திற்கும் (2910 மில்லி யன் கன அடி) செம்பரம் பாக்கம் ஏரியில் 20.38 அடி உயரத்திற்கும் (1933 மில்லியன் கன அடி), சோழ வரம் ஏரியில் 10.80 அடி உயரத்திற்கும் (439 மில்லி யன் கன அடி), கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தின் 36.41 அடி உயரத்திற்கும் (491 மில்லியன் கன அடி) தண்ணீரும் இருப்பு உள்ளது. இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 5 ஏரிகளிலும் தற்போது 9 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்றனர்.