districts

img

சுடுகாட்டுக்கு பாதையில்லை விவசாய நிலத்தில் சடலங்களை புதைக்கும் அவலம்

கிருஷ்ணகிரி ஆகஸ்ட் 25-

       ஊத்தங்கரை வட்டம் பெரிய  கொட்டக்குளம் ஊராட்சி நாகனூர் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

       இங்குள்ள வீடுகளுக்கும், பல தலைமுறைகளாக  விவசாயம் செய்து வரும் நிலத்திற்கும்  பட்டாக்கள் வழங்கப்படவில்லை.  1988 இல்  வீடுகள் விவசாய நிலங்கள் அரசின் கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது அரசுக்கு வீட்டு நில வரி விவசாய நிலத்திற்கான  வரி (கந்தாயம்) இன்று வரை செலுத்தப்பட்டு வருகிறது. மூன்று தலைமுறைகள் கடந்து அனுபவத்தில் நிலத்தில் விவ சாயம் செய்து வருகின்றனர்.  

      கிராம கணக்குகளில் அனா தினம் என்று பதிவாகியுள்ளது. நாக னூரில் இருந்து மூன்று பகுதி களில் வண்டி பாதைகள் செல்கிறது. இந்த பாதைகளில் தான் கால காலமாக மக்கள்  சென்று வருகின்றனர்.பல நேரங்களில் இந்த பாதைகளை ஒட்டி உள்ள நிலத்தை பயன்படுத்தி வருபவர்கள் வண்டி பாதை தனக்கு சொந்தம் என பாதையை மறித்து போக்கு வரத்தை தடுக்கின்றனர்.           சுடு காடுநிலம் அரசு ஒதுக்காத நிலை யில்  இறப்பவர்களை  அவரவர் விவசாய நிலத்தில்  புதைத்து வருகின்றனர்.  

     பல நேரங்களில் எங்கள் நிலத்தில் விட்டுள்ள பாதையில் பிணத்தை எடுத்து செல்லக் கூடாது என பாதைக்கும் தடை போட்டு வருகின்றனர். இதனால் கிராமத்தில் இறப்ப வர்களை புதைக்க வெளியே எடுத்துச்செல்ல முடியாமல்  கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.              நாகனூர் கிராமத்திற்கு என்று 3 கிலோ மீட்டர் தூரத்தில்  கிணறு  வெட்டப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

     இங்கிருந்து நகரப் பேருந்து, மளிகை கடை, ஆரம்ப சுகாதார நிலையம் தனியார் கிளினிக், பள்ளிக்கூடம், ரேசன் கடை அனைத்திற்கும் ஆறு கிலோ மீட்டர் நடந்து, அல்லது இரு சக்கர வாகனத்தில் தான் செல்ல  வேண்டும்.ஊத்தங்கரை வட்ட அரசு மருத்துவமனைக்கு சொல்வ தென்றாலும் 6 கிலோமீட்டர் நடந்து கல்லாவி சாலைக்கு வந்து பேருந்து பிடித்து 17 கிலோ மீட்டர் கடக்க வேண்டும்.

     இப்பிரச்சனைகள் குறித்து ஊத்தங்கரை வட்டாட்சியர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களில் பல முறை  கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது இதுவரை சிறு பிரச்சனைகள் கூட தீர்க்கப்படவில்லை.

     கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்கப்பட்டது. உடனடியாக பார்த்து நடவடிக்கை எடுப்போம் என மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் முன்பு கூறிய வட்டாட்சியர்கள் இன்னும் வந்து பார்க்கவுமில்லை,' நாகனூரின் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் உள்ள மோட்டாரும் பழுதான நிலையில் தண்ணீர் கிடைக்கா மல் அவதிப்பட்டு வருகிறோம்.

     இனியும் காலம் தாழ்த்தாமல் பிரச்சனைகளை தீர்க்க நட வடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊத்தங்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் நாகலூர் மக்கள்   கூறுகின்றனர். ஒய்.சந்திரன்