districts

சென்னை முக்கிய செய்திகள்

மின்கம்பிகள் திருட்டு                 

 பெரியபாளையம்,ஏப்.27- வெங்கல் அருகே உள்ள கீழானூர் துணை மின் நிலைய  எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்,  ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம் உள்ளிட்ட பல்வேறு துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் உயர் மின் அழுத்த மின் வயர்களை மாற்றும் பணி நடந்து வந்தது.  இதற்காக அப்பகுதியில் ஏராளமான மின்கம்பிகள் வைக்கப் பட்டு இருந்தன. இந்நிலையில் அந்த மின்கம்பிகள் திருடு போனது.  இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் வெங்கல் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த மின்கம்பி திருட்டு தொடர்பாக மொத்தம் 12 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டியில்  கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

கடலூர், ஏப்.27- கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரத்திற்கு வருகை தந்தார். அவருடன் தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் மற்றும் அதி காரிகள் வந்திருந்தனர். மாவட்ட அளவி லான ஆய்வு பணிகளில் முதல்வர் ஈடு பட்டார். வட்ட அளவிலான ஆய்வு பணி களில் தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் மேற்கொண்டனர்.  பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயிந்த் புதனன்று(ஏப்,26)ஃ நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பட்டா மாற்றம், இ-சேவை மையம், சர்டிபிகேட் வழங்கும் பணி ஆகியவைகளை ஆய்வு செய்து அதிகாரிகளை பாராட்டினார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலு வலர் பூவராகவன், கடலூர் கோட்டாச்சி யர்அதியமான் கவியரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்:  4 பேர் கைது

கள்ளக்குறிச்சி, ஏப்.27- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கரா புரம் அருகே ராவுத்தநல்லூரில் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது அதே ஊரைச் சேர்ந்தவர் மாய வனுக்கும் (50) ஊராட்சி மன்றத் தலைவி யின் கணவரான கதிரவனின் ஆதர வாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் அரிவாள், உருட்டு கட்டையுடன் மாயவனை தாக்கினார். பதிலுக்கு மாயவன் தரப்பினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாயவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்த புகாரின் பேரில் வட பொன்பரப்பி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவு கிறது. எனவே பாதுகாப்புக்காக காவ லர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் இயற்கை துறைமுகத்தை விரிவுபடுத்த வேண்டும்

முதல்வரிடம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கோரிக்கை

கடலூர், ஏப்.27- கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றான இயற்கை துறைமுகத்தை ஆழப்படுத்தி விரிவுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஆய்வுக் கூட்டத்திற்கு விழுப்புரம் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதன் விவரம் வருமாறு:-  கடலூர் இயற்கை துறைமுகத்தை ஆழப்படுத்தி, விரிவுபடுத்தி, கப்பல் போக்குவரத்தை உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பை உரு வாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் வழியாக சென்னைக்கு கப்பல் போக்குவரத்து, பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும்.

சர்க்கரை ஆலையை  அரசே ஏற்க வேண்டும்

மூடப்பட்ட அம்பிகா ஆரூரான் சர்க்கரை ஆலையை அரசு ஏற்று நடத்திட வேண்டும். அம்பிகா ஆருரான் சர்க்கரை ஆலைகள் விவ சாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். விவ சாயிகள் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகம் பெற்றுள்ள கடன்களை பைசல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் 2011 ஆம் ஆண்டில் அடிக்கல்  நாட்டிய அரசு மருத்துவக் கல்லூரி உடனடியாக துவக்க வேண்டும். அரசு சட்டக் கல்லூரி, மகளிர் கல்லூரி ஆகியவை ஏற்படுத்த வேண்டும்.

மழை வெள்ளத்திலிருந்து பாதுகாத்திட...

மழை வெள்ள பாதிப்பில் இருந்து கடலூரை பாதுகாக்க கடலூரில் அனைத்து வார்டுகளிலும் வடிகால் வசதி, கெடிலம், பெண்ணையாறு ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும். வெள்ள காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, கெடிலம், பெண்ணையாறு, மணி முத்தாறு, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளின் குறுக்கே 5 கி.மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். அருவாமுக்குத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, கொண்டங்கி ஏரி, வெலிங்டன் ஏரியை முழுமையாக தூர்வார ஏற்பாடு செய்வது மட்டுமில்லாது அவற்றி சுற்றி உள்ள ஆக்ரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.

சுற்றியுள்ள பல மாவட்டங்களின் வடிகால் மாவட்டமான கடலூர் மாவட்டம் தொடர்ந்து இயற்கை பேரிடர் பாதிக்கும் மாவட்டம் ஆகும். எனவே “நிரந்தர இயற்கை பேரிடர் மேலாண்மை அமைப்பு” முறையை கடலூர் மாவட்டத்திற்கு என பிரத்யோகமாக உருவாக்க வேண்டும். நீர் வழித்தடங்கள் ஆக்கிர மிப்பு முற்றிலும் அகற்றப்பட்டு வடிகால் நீர் கடலில் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகளில், பல பத்தாண்டுகாலமாக குடியிருந்த மக்கள், நீர் நிலை ஆக்ரமிப்பாளர் கள் என்று காரணம் காட்டி விரட்டப் பட்டுள்ளனர். அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய மாற்று இடத்தை அரசு உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிசை இல்லா மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை முழுமையாக மாற்ற ஐந்து லட்சம் செலவில் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடலூர் மாநகரில் பெரும்பாலான மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. பாது காக்கப்பட்ட குடிநீரை காலை-மாலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நகரம் முழுவதும் உள்ள குடிநீர் குழாய்களை புதுப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாக்கடை நீர் கலப்பை தடுத்த வேண்டும். விருதாச்சலம் செராமிக் சிறு குறு தொழில்களை பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் வல்லபடுகை -கருப்பூர் -கஞ்சன்கொல்லை வரை சுமார் 30 கி.மீ. சாலை சேதம் அடைந்து போக்குவரத்துக்கு பய னற்ற நிலையில் உள்ளது. இந்த கொள்ளிடம் கரை சாலையை சீரமைத்து தர நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்  இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.