மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சோழிங்கநல்லூர் பகுதி சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம், பகுதிச் செயலாளர் ஜெயவேல் முதல் தவணையாக 33 சந்தாக்களுக்கான தொகையை வழங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ச.லெனின், சுந்தர், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.சுரேஷ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.