கிருஷ்ணகிரி,ஜன.11- ஓசூர் மாநகரில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால், இருபுறமும் பாதாள சாக்கடை மூடப்படாமல் மரண குழிகள் திறந்து கிடந்தது. இதுகுறித்து 6 ஆம் தேதி ‘தீக்கதிர்’படத்துடன் விரிவாக செய்தி வெளி யிட்டது. மேலும், தேசிய நெடுஞ் சாலை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கவனத்துக் கும் கொண்டு செல்லப் பட்டது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை பரா மரிப்பு பணி துரிதமாக நடை பெற்று வருகிறது . ஹில்ஸ் ஹோட்டல், மூக்கண்டப்பள்ளி பாலம் ஆகிய 2 இடங்களைத் தவிர 50 க்கும் மேற்பட்ட இடங்க ளில் அபாயகரமாக திறந்து கிடந்த பாதாள சாக்கடை யில் மூடப்பட்டன. சாலை கள் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.