சென்னையில் சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கியது
சென்னை,டிச.22- வெள்ளத்தில் பெரும்பாலான சாலை கள் மிகவும் மோசமடைந்த நிலையில் அவற்றை உடனே சரி செய்யும் பணி யில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. புதிய சாலைகள் போடுவதற்கு காலதாம தமாகும் என்பதால் தற்சமயம் பள்ளங்களை நிரப்புவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்துஇருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஆர்.கே. மடம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதி களில் உள்ள பள்ளங்களை சாலைப்பணி யாளர்கள் சரி செய்தனர்.சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1056 சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மாம்பலம், தியாகராய நகர், கோடம்பாக்கம்பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் சாலைகளில் அதிக பள்ளம் ஏற்பட்டு உள்ளன.ராயபுரம் மண்டலத்தில் 567 சாலைகள், அண்ணாநகர் மண்டலத்தில் 396 சாலைகளை அதிகாரிகள் கண்ட றிந்துள்ளனர். அண்ணாநகரில் 12068 சதுர மீட்டருக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. தேனாம்பேட்டை மண்ட லத்தில் 381, திரு.வி.க. நகர் 331, மாதவரம் 273, தண்டையார்பேட்டை 214, சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. மற்ற மண்டலங்களில் 200-க்கும் குறைவான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.தெருக்களில் பள்ளம் இருந்தால் 1913-க்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறுகையில்,மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலை கள் சிமெண்ட் கலவைகள் மூலம் நிரப்பப்படு கின்றன. வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக இந்தபணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சாலைகளில் உள்ள சிறிய பள்ளங்கள் முதல் பெரிய குழி வரை இந்த கலவையின் மூலம் நிரப்பப்படும். தேவையான இடங்களுக்கு தார்சாலைகளும் போடப்படும். ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் புதிய சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் என்றார்.
கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை திறந்துவிட பசுமைத் தீர்ப்பாயம் தடை
சென்னை,டிச.22- சென்னை கொரட்டூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மாசுபடுவதை தடுக்க அதன் சுற்றுப்புற தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகளை ஏரியில் திறந்துவிட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த ஏரி மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்றும், ஏரிக்கு கழிவு நீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் என்றும், ஏரிக்கு கழிவு நீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அதற்கான அறிக்கை தாக்கல் செய்யவும் சம்பந்தப் பட்ட துறைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தர விட்டுள்ளது.அம்பத்தூர் ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து வெளியேறும் கழிவு நீர், உபரி கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரிக்கு கொண்டு செல்லப்படு கிறது. இந்த கால்வாயில் மழைநீர் வடிகால் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளி யேற்றப்படுவதால் கொரட்டூர் ஏரியில் மாசு அளவு அதி கரித்துள்ளது.
கேவிபி வங்கியுடன் எச்டிஎப்சி ஒப்பந்தம்
சென்னை.டிச 22 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎப்சி லைஃப் மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து கார்ப்பரேட் ஏஜென்சி (சிஏ) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், கரூர் வைஸ்யா வங்கியின் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் முதலீடு, ஓய்வூதியம் மற்றும் சிக்கலான நோய் போன்றவற்றுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை தரும் எச்டிஎப்சி லைஃப் இன் பரந்த அளவிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பெற முடியும். இந்தியாவில் பெரும்பாலானோர் காப்பீடு செய்வ தில்லை. இந்த பாதுகாப்பு இடைவெளி மற்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது. பல்வேறு பொறுப்புகள், கடமைகள் கொண்ட ஒவ்வொரு நபரும், தங்களையும் தங்கள் குடும்பங்களையும் நிதி ரீதியாகப் பாதுகாப்பது அவசியம். ஆயுள் காப்பீடு என்பது நிதி பாதுகாப்பை வழங்குவதோடு மட்டு மல்லாமல், தனிநபர்கள் தங்கள் நீண்டகால நிதி இலக்கு களை எட்ட நீண்ட காலத்திற்கு சேமிக்கவும் உதவுகின்றன.
கலாசேத்ரா ஆசிரியருக்கு எதிரான புகாரை விசாரிக்க உத்தரவு
சென்னை,டிச.22- கலாசேத்ரா பாலியல் தொல்லை புகாரில் நட வடிக்கை எடுக்கவில்லை எனவும், உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வெள்ளியன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாசேத்ரா கல்லூரி நடன ஆசிரி யருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலா சேத்ரா அறக்கட்டளையின் நடன ஆசிரியர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக மற்றொரு மாணவி சென்னை காவல்துறையில் புகார் தெரி வித்தார். இந்நிலையில், விளம்பரத்திற்காக புகார் அளிக்கப் பட்டிருப்பதாக தெரியவந்தால் புகார்தாரர் மீது நடவடிக்கை வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஜிப்மரில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி கூடம்
புதுச்சேரி, டிச.22- நாடு தற்போது புற்றுநோய் மற்றும் அதன் பாதிப்புகளினால் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறது. உலகளாவிய பிரச்சனையாகவும் உள்ள இந்த நோய்க்கு கை கொடுப் பது ஆராய்ச்சிகள் மட்டுமே. புற்றுநோய் சிகிச்சை மூன்று சிகிச்சை முறைகளை கொண்டது. மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையாகும். இவை அனைத்திலும் மருத்துவ முன்னேற்றத் துக்காக ஆராய்ச்சிகள் செய்து வரப்படுகிறது. மற்ற உலக நாடுகளில் இந்த துறை சார்ந்த ஆராய்ச்சிகள் 20-30 வருடங் களாக நடந்து கொண்டிருந்தாலும், இந்தியாவில் இந்த ஆராய்ச்சிகள் மிக குறைவாகவே நடத்தப்படுகின்றன. பல இடங்களில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக கலந்து செய்யும் ஆராய்ச்சிகள் சிகிச்சையில் மாற்றங்களை தந்துள்ளது. இது போன்ற ஆராய்ச்சிகள் நமது நாட்டில் அதிகரிப்பதால் ஆக்கபூர்வமான பல சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்க உதவுகிறது. இதனை கருத்தில் கொண்டு உயிரி தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி) ஆராய்ச்சி உதவி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் இந்திய அரசின் கீழ், அதன் முதன்மை திட்டமான தேசிய உயிரி மருத்துவ பணி (நேஷனல் பயோ பார்மா மிஷின்) மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளின் பங்களிப்பை கோரியுள்ளது. இதன் ஒரு முயற்சியாக Network Of Oncology Clinical Trials India (என்ஓசிஐ) என்ற கூட்டமைப்பு ஜிப்மர் மருத்துவமனையை தலைமையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ரூ. 9.6 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த அமைப்பில், நாட்டின் பல்வேறு பகுதி களில் இருக்கும் 6 மருத்துவமனை கள் பங்கேற்றுள்ளன. இதுகுறித்து ஜிப்மர் மருத்துவ மனையில் புற்றுநோய் துறை தலை வர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- என்ஓசிஐ குழு 6 விதமான புற்று நோய்களின் விபரங்கள் பல தரப்பட்ட நோயாளிகளிடமிருந்து சேகரித்து வருகிறது. மேலும், இக்குழு தங்களது மருத்துவமனையில் மருத்து ஆராய்ச்சி பரிசோதனைகளையும் துவங்கி உள்ளது. இதன் மூலம் நோய்க்கு சுலபமான தீர்வுகளையும், மருந்து தயாரிப்புக்கான பரிந்துரைகளையும் அளிக்க ஏதுவாக அமையும். சமீபத்தில், ஜிப்மர் மருத்துவமனை யில் ஆராய்ச்சியில் நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் செலவில் புற்று நோயாளிகளுக்கு பசியின்மையை போக்கும் மருந்து கண்டறியப்பட்டுள் ளது. இந்த ஆராய்ச்சி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதோடு, அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியும் இதனை பசியின்மை யால் அவதியுறும் புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறது. ஆராய்ச்சி மேம்பாட்டை நோக்க மாக கொண்டு என்ஓசிஐ குழுவானது இது போன்ற ஆராய்ச்சி பரிசோதனை களின் அவசியத்தை பொது மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள், காணொலிகள் ஆகியவற்றின் மூலம் எடுத்து வைத்து வருகிறது. இக்குழு புற்றுநோய் பற்றிய தகவல்களை தங்களுடைய இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.
தொடர் போராட்டம் எதிரொலி சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி
திருவண்ணாமலை, டிச. 22- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதி யில் பெருமளவில் சிறு பான்மை மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா காலத்திற்கு முன்பு வறுமை நிலையில் வசித்து வந்த சிறுபான்மையின மக்கள், கொரோனா காலத்திற்கு பிறகு மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தவித்து வருகின்றனர். இந்த மக்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க கடன் உதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப் பட்டது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், கடன் உதவி அளிப்பதாக அதிகாரிகள் வாக்குறுதிய ளித்தார். இதையடுத்து, ஒரு நபருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம், 18 பேருக்கு ரூ. 9 லட் சம் செய்யாறு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்டது. இந்த நிகழ் வில், மாவட்ட குழு உறுப்பி னர் இஸ்மாயில், மாவட்டச் செயலாளர் அ.அப்துல் காதர். மாவட்டத் தலைவர் கா.யாசர் அராஃபத், எம். வீர பத்திரன், ப.செல்வம், செய்யாறு வட்டார செயலா ளர் டி. வெங்கடேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் சிறுபான்மை மக்களுக்கு அந்த காசோலையை அளித்து வாழ்வில் மேலும் மேம்பட வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கொலை வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவான குற்றவாளி கைது
சிதம்பரம், டிச.22 - கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர காவல் நிலைய கனக சபை நகரை சேர்ந்த அண்ணாமலைபல்கலைக்கழக ஊழியர் சம்பத் மனைவி கிரண் ரூபிணி. இவருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. அதற்கு இடையூறாகஇருந்த கணவன் சம்பத்தை கொலை செய்ய திட்டம் தீட்டி முட்லூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அமீர் பாஷா என்பவரின் உதவியுடன் கடந்த 30.8.2013-ஆம் தேதி நள்ளிரவு கார் ஏற்றி கொலை செய்து அந்தகொலையை விபத்து என்று மாற்றுவதற்கு மூவரும் முயற்சி செய்தனர். அதை திறம்பட புலனாய்வு செய்த அன்றைய சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் தகுந்த சாட்சியங்களுடன் விபத்து இல்லை என்று கண்டறிந்து மூவரையும் கொலை வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். பின்னர், மூவரும் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்.ராஜாராம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றவுடன் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பி.ரகுபதி மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம்த லைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கின் மூன்றாவது எதிரி அமீர் பாஷா என்பவரை தனிப்படை காவலர்கள் விழுப்புரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் (42)மற்றும் கிரண் ரூபிணி (36) ஆகியோர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்படி, சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் சிறப்பு உதவியாளர் புருஷோத்தமன் தலைமை காவலர் ரமேஷ், ராமநாதன் பெண் காவலர்கள் சுதா, புனிதா ஆகியோர் பெங்களூர் சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு வெள்ளிக் கிழமை அன்று அழைத்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் திறன்பட புலனாய்வு செய்து வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் தனிப்படையை தொடர்ந்து கண்காணித்து இரண்டு எதிரிகளையும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.