districts

சுவர் இடிந்து விழுந்து  பெண் பலி

சென்னை, ஜன. 27- சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் தியேட்டர் அருகில் பழமையான கட்டிடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடு பட்டிருந்தனர். அப்போது கட்டிடத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டி ருந்த தனியார் ஐடி நிறு வனத்தில் பணியாற்றி வந்த பத்மபிரியா, விக்னேஷ் குமார் இருவரும் இடிபாடு களுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு வீரர்கள் பத்ம பிரியாவை பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்ட னர். விக்னேஷ் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டி ருந்தது. பத்ம பிரியாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து  ஆயிரம்விளக்கு  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;