காஞ்சிபுரம், டிச. 1 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை வெளுத்து வாங்கிய தால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரியின் கொள்ளவு 20 அடியை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திர மேரூர், குன்றத்தூர் ஆகிய நகரங்களில் மழை வெளுத்து வாங்கியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை மழையுடன் காற்றும் வீசியதால் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு, கடந்த இரு நாட்களில் மட்டும் கூடுதலாக 40 சதவீதம் அளவுக்கு மழை நீர் வந்துள்ளது என, பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிக ளான தாமல், தென்னேரி, உத்திரமேரூர் ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரிகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காஞ்சிபுரம் நகரில் ஓடும் வேகவதி ஆற்றங்கரையில் உள்ள பொது மக்கள் வெளியேற்றப்பட்டு பாது காப்பு முகாம்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கனமழை மற்றும் புயல் காரணமாக காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளான காந்தி ரோடு, காமராஜர் வீதி, நான்கு ராஜ வீதிகளில் சனிக்கிழமை முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர் மழையின் காரண மாக காஞ்சிபுரம், ஓரிக்கை ஆகிய அரசு போக்குவரத்து பணி மனைகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. செம்பரபாக்கம் ஏரி நிலவரம் செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 19.31 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்போது தண்ணீரின் அளவு 2.268 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 4856 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.