சென்னை மாநகராட்சி மண்டலம் 3க்குட்பட்ட மாதவரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் இங்கு பொதுமக்களுக்கு எந்த அடிப்படைவசதிகளும் செய்யப்படவில்லை. அதிகாரிகளின் மெத்தனத்தால் பெண்கள், முதியவர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் கனிவான அணுகுமுறை என்பது மருந்துக்கூட இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது. நடவடிக்கை எடுக்குமா அரசு நிர்வாகம் ?