திருவள்ளூர்,ஆக.17-
கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மோகன் பாபு(வயது24) விவசாயி ஆவார். இந்நிலையில் புதனன்று இரவு இப்பகு தியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்பொழுது மின்சார ஒயர் ஒன்று அறுந்து வயல் வெளியில் விழுந்து கிடந்தது. இதை கவனிக்கா மல் சென்ற பாபு மிதித்து விட்டநிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.